இரண்டு தொகுதிகள் கொண்ட பாடநூல்கள் ஒரே புத்தகமாக மாற்றம் - ஆசிரியர் மலர்

Latest

29/06/2020

இரண்டு தொகுதிகள் கொண்ட பாடநூல்கள் ஒரே புத்தகமாக மாற்றம்


சென்னை,
இரண்டு தொகுதிகள் கொண்ட 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடநூல்கள் ஒரே புத்தகமாக மாற்றப்பட்டுள்ளது
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதிய பாட புத்தகங்கள் தயாரானபோது சிபிஎஸ்இ பாடப் புத்தகங்களுக்கு இணையாக, அதிக பக்கங்கள் கொண்ட தாகவும், அதிக  கருத்துக்கள் கொண்டதாகவும்,  2 தொகுதிகள் கொண்ட புத்தகங்களாகவும் உருவாக்கப்பட்டன. * ஆனால் இந்த பாடத்திட்டங்கள் அளவுக்கு அதிகமாக இருக்கின்றன என்றும், இவற்றை குறைக்க வேண்டும் என்றும் கல்வித்துறைக்கு தொடர்ச்சியாக கோரிக்கைகள் வந்தன.
* இதனையடுத்து பாடத்திட்டங்களின் அளவு பல்வேறு வகுப்புகளில் குறைக்கப்பட்டுள்ளன
* 2 புத்தகங்களை கொண்ட 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல், வரும் கல்வி ஆண்டில் ஒரே பாடப்புத்தகமாக மாற்றப்பட்டுள்ளது, * அதேபோல் 11 மற்றும் 12ம் வகுப்புகளில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய மூன்று பாடப் புத்தகங்கள் மட்டுமே இரண்டு தொகுதிகள் கொண்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, * வர்த்தக கணிதம் உள்ளிட்ட பல்வேறு பாடப் புத்தகங்கள் இரண்டு தொகுதிகளுக்கு பதிலாக ஒரே புத்தகமாக மாற்றப்பட்டு இருப்பதாகவும் , இந்த மாற்றங்கள் அனைத்தும் வரும் கல்வி ஆண்டில் அமலுக்கு வரும் என்றும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால் மாணவர்கள் படிக்கும் சுமை வெகுவாக குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459