புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பருவத் தேர்வுகள் ரத்து - ஆசிரியர் மலர்

Latest

09/06/2020

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பருவத் தேர்வுகள் ரத்து



புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. 
நாடு முழுவதும் கரோனா பரவல் காரணமாக, பல மாவட்டங்களில் மாணவர்களுக்கு நடக்கவிருந்த தேர்வுகள் அனைத்தும் மாற்றியமைத்தும், சில தேர்வுகள் ரத்துசெய்யப்பட்டும் வருகின்றது. 
அந்தவகையில், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு நடைபெறவேண்டிய முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பருவத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 
மேலும், இண்டர்னல் மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு தேர்ச்சி வழங்கப் புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. 
அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு மட்டும் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459