தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வுகமுடிவுகள் வெளியான பிறகே பள்ளிகள் திறப்பு - ஆசிரியர் மலர்

Latest

03/06/2020

தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வுகமுடிவுகள் வெளியான பிறகே பள்ளிகள் திறப்பு


தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வுகமுடிவுகள் வெளியான பிறகு, பெற்றோரை அழைத்து பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவடட்ம் கோபிச்செட்டிப்பாளையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகள் வெளியான பிறகே, பெற்றோர்களை அழைத்து பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும்.
அதே சமயம், மாணவர்களின் சுமையைக் குறைக்கும் வகையில், பள்ளிப் பாடங்களைக் குறைப்பது குறித்து 16 பேர் கொண்ட உயர்நிலைக் குழு ஆய்வு செய்து வருகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459