கரோனோ பாதிப்பு முழுமையாக நீங்கிய பின்னர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துக - முன்னாள் கல்வி அமைச்சர் - ஆசிரியர் மலர்

Latest

04/06/2020

கரோனோ பாதிப்பு முழுமையாக நீங்கிய பின்னர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துக - முன்னாள் கல்வி அமைச்சர்


கரோனோ பாதிப்பு முழுமையாக நீங்கிய பின்னர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துக என முன்னாள் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் முன்னாள் கல்வித்துறை அமைச்சர் அளித்த பேட்டியில், “நாளுக்கு நாள் கரோனோ பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கரோனோ பாதிப்பு முழுமையாக நீங்கிய பின்னர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த வேண்டும்.


பத்தாம் வகுப்பு தேர்வை ஒன்பதரை லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். தற்போதைய நிலையில் தேர்வுக்குப் பள்ளிகளை தயார் செய்வதும் மாணவர்கள் தேர்வு எழுத வருவதும் மிகச்சிரமம்
உடனடியாக 10-ம் வகுப்பு தேர்வு நடத்துவது என்பது மாணவர்களுக்கு மிகுந்த அச்சத்தை தரக்கூடியதாக இருக்கும்
எனவே, அரசு தீவிரமாக சிந்தித்து கரோனோ பாதிப்பு முழுமையாக நீங்கிய பின்னர் 10-ம் வகுப்பு தேர்வை நடத்துவதே மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சரியானதாக இருக்கும்.
ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலத்திற்கு செல்வதற்கு இ-பாஸ் தேவை என்ற நடைமுறை கரோனோ பொதுமுடக்கம் காலத்த்தில் இடம் பெயர்ந்த மாணவர்களின் கல்வியை பாதிக்கும்” என்றார்.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459