உஷார் கொரோனாவுக்கு பயந்து மாஸ்க் போடுறீங்களா ? இதை படிங்க.... - ஆசிரியர் மலர்

Latest

20/05/2020

உஷார் கொரோனாவுக்கு பயந்து மாஸ்க் போடுறீங்களா ? இதை படிங்க....

கொரோனா பரவலைத் தடுப்பதற்காக பொதுவெளியில் நடமாடுபவர்கள் முகக்கவசம் அணிதல் கட்டாயம் என மத்திய, மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.
நோயுள்ளவர்களும், நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பவர்களும், அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களும் அணிந்தால் மட்டுமே போதும் என  உலக சுகாதார நிறுவனமும் மாஸ்க் அணிவது குறித்து அறிவித்திருந்தது. 
சமூக விலகல் என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு நான்கு சுவர்களுக்குள்  அடைபட்டு சோம்பித் திரிந்தால்  உடல் நோய் எதிர்ப்பு சக்தியை இழக்கும்.
வெயில், மழை, புழுதி எல்லாவற்றையும் அனுபவித்து வளர்வது மட்டுமே  உடலுக்கு இயற்கையான முறையில்  நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்கும். 
தொடர்ந்து முகக்கவசம் அணிவதால்  வைரஸ்களில் இருந்து தப்பிக்க முடியாது. நாசிகளில் ஊடுருவி படுதீவிரமாக நரம்புகளுக்குள் நுழைந்து மூளையை நேரடியாகத் தாக்கும் அபாயம் அதிகரிக்கும் என  மருத்துவர் ரஸ்ஸல் தெரிவித்துள்ளார்.
30 அல்லது 50 சதவீத தொழிலாளர்களுடன் தொழிற்சாலைகள் இயக்கப்படலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
தொழிலாளர்கள் தொடர்ந்து வேலை நேரத்தில் முகக்கவசம் பயன்படுத்துவதால் அவர்களுக்கு தீராத தலைவலி உருவாகும் வாய்ப்புக்கள் அதிகம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே தலைவலி பிரச்சனைகளால் அவதிப்படுவோர் மேலும் முகக்கவசம் அணிவதால் நிலைமை மிகவும் மோசமடைந்து அவர்களது உயிருக்கே உலை வைக்கும் அளவிற்கு கொண்டு செல்லலாம் என்று அச்சுறுத்துகிறார்கள் மருத்துவர்கள்.
N95 முகமூடியை தொடர்ந்து நாள் முழுவதும் அணிவதால்  நுரையீரலுக்குச் செல்லும் ஆக்சிஜனின் அளவு  20 சதவிகிதம் வரையில் குறையலாம். தொடர்ந்து குறைவான அளவு ஆக்சிஜன் மட்டுமே நுரையீரலுக்குள் சென்று கொண்டிருந்தால் சுயநினைவு இழக்கும் அபாயம் அதிகரிக்கும். இந்த அவஸ்தைகளுடன் தான் மருத்துவர்களும், செவிலியர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்துக் கொண்டிருக்கிறார்கள். 
ஏற்கனவே முகக்கவசத்துடன் நடைபயிற்சி மேற்கொண்ட முதியவர்கள் சிலர் இறந்துள்ளதை செய்திச் சேனல்கள்  உறுதி செய்துள்ளன. இதே போல்  சீனாவில் முகக்கவசம் அணிந்து விளையாடிய பள்ளிச் சிறுவர்கள் இறந்துள்ளதாகவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூட்ட நெரிசல் அதிகம் உள்ள இடங்களில் யாராவது தும்மும் போதும், இருமும் போதும் கைவசம் உள்ள துணிகளால் முகத்தை மூடிக் கொண்டால் மட்டும் போதும். தொடர்ந்து முகக்கவசம் அணியத் தேவையில்லை என மருத்துவர்களின் ஆராய்ச்சி முடிவுகள் உறுதி செய்துள்ளன

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459