பிறந்தது நம்பிக்கை : செப்டம்பர் மாதம் கொரோனாவிற்கு தடுப்பூசி - ஆசிரியர் மலர்

Latest

20/04/2020

பிறந்தது நம்பிக்கை : செப்டம்பர் மாதம் கொரோனாவிற்கு தடுப்பூசி


உலகமே இன்று நாவல் கொரோனா பிடியில் சிக்கித் தவிக்கிறது. உலக அளவில் 24,07,414 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,65,073 பேர் உயிரிழந்துள்ளனர். 6,25,199 பேர் மீண்டு வந்துள்ளனர்.
தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,477 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டு தமிழகத்தில் 105 பேருக்கு கொரோனா தொற்று வந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 365லிருந்து 411ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் சென்னையில் மட்டும் மொத்த எண்ணிக்கை 285 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை கொரோனாவுக்கு தடுப்பு மருந்தோ, நிவாரண மருந்தோ இல்லை. அமெரிக்கா, சீனா உள்பட உலக நாடுகள் இதற்கான மருந்தை, தடுப்பு ஊசியை கண்டுபிடிக்க வேகமாக செயல்பாட்டில் இறங்கியுள்ளன.
இந்த நிலையில் நடப்பாண்டில் வரும் செப்டம்பர் மாதம் நாவல் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு ஊசி வெற்றிகரமாக செயல்பாட்டுக்கு வந்துவிடும் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
Corona LIVE: 1 லட்சம் பேருக்கு மேல் சம்பளத்தை நிறுத்தப்போகும் டிஸ்னி?
இந்த செய்தியை கேட்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது என்றாலும், எந்த தடங்கல்களும் இல்லாமல்,
உலக நாடுகள் அனைத்துக்கும் இந்த மருந்து உடனடியாக கிடைக்க வேண்டும் என்பதுதான் தற்போதைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.
நேபாளத்தில் கொரோனா: 12 இந்தியர்கள் உட்பட 31 பேர் பாதிப்பு
செப்டம்பர் மாதத்தில் மட்டும் பத்து லட்சம் தடுப்பு ஊசிகள் ஒரே நேரத்தில் சந்தைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
. முன்பு தடுப்பு ஊசி சந்தைக்கு வருவதற்கு ஒன்றரை ஆண்டுகள் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தொடர்ந்து பல விஞ்ஞானிகள் அயராது உழைத்து வருவதால், விரைவில் சந்தைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.
கொரோனா உயிரிழப்பு சீனாவில்தான் அதிகம்: டொனால்ட் ட்ரம்ப்
இந்த மருந்து ஒரே டோஸில் மனித உடலில் செலுத்தப்படும்
. இந்த ஊசிக்கு ChAdOX1 என்று விஞ்ஞானிகள் பெயர் வைத்துள்ளனர். இதுவரைக்கும் இந்த தடுப்பு ஊசி மூலம் 12 மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நல்ல எதிர்ப்பு சக்தியை அளிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே பெரிய அளவில் இந்த மருந்து தயாரிப்பில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஈடுபட்டுள்ளது. ஆதலால்,
வரும் செப்டம்பர் மாதம் அதிகளவிலான தடுப்பு ஊசி மருந்து சந்தைக்கு வரும் என்ற நம்பிக்கையை அளித்துள்ளனர். இதற்கு பிரிட்டன் அரசும் ஆதரவு தெரிவித்துள்ளது.
நாவல் கொரோனா தொற்று வருவதற்கு முன்பே ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள் மருந்து கண்டுபிடித்து சிம்பன்சிக்கு அளித்து சோதனை செய்துள்ளனர். இந்த நிலையில் நாவல் கொரோனா தொற்று வெடித்தது
. சோதனையில் இருந்த மருந்து மூலக்கூறுடன், நாவல் கொரோனாவுக்கும் இணைத்து மருந்து கண்டுபிடித்துள்ளனர்.
இதுவரை இந்த மருந்து விலங்குகளுக்கு மட்டுமே அளித்து பரிசோதிக்கப்பட்டுள்ளது. மனிதர்களிடம் முதன் முறையாக, முதல் கட்டமாக 500 பேருக்கும், அடுத்த கட்டமாக 5000 பேருக்கும் அளிக்கப்படும் என்று ஆக்ஸ்போர்டு தெரிவித்துள்ளது.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459