தமிழகத்தில் கொரோனா வைரசால் இன்று மேலும் 49 பேர் பாதிப்பு - ஆசிரியர் மலர்

Latest

18/04/2020

தமிழகத்தில் கொரோனா வைரசால் இன்று மேலும் 49 பேர் பாதிப்பு



சென்னை:
கொரோனா வைரசின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 1-ம் தேதி முதல் கொரோனாவால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும்,
தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதற்கிடையே, தமிழக அரசு நேற்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1323 ஆக இருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ்

தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1372 ஆக அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா வைரசால் இன்று மேலும் 49 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1372 ஆக அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார். 
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459