தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 1,629 ஆக உயர்வு - ஆசிரியர் மலர்

Latest

22/04/2020

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 1,629 ஆக உயர்வு


தமிழகத்தில் கரோனா வைரஸின் பாதிப்பானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் கரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 
தமிழகத்தில் கரோனா வைரஸை கட்டுக்குள் வைக்கவும், பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு தேவையான
நடவடிக்கை எடுக்கவும் பல்வேறு முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
நேற்றுவரை தமிழகத்தில் காரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களின் எண்ணிக்கை 1,596 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 18 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து இருந்தனர். 
இந்த நிலையில், இன்று 33 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 1,629 ஆக உயர்ந்துள்ளது.
இன்று பூரண நலன் பெற்று 27 பேர் இல்லங்களுக்கு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 662 ஆக உயர்ந்துள்ளது. 
மேலும், சென்னையில் மேலும் 15 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கரோனா பாதிப்பு பட்டியலில் சென்னையில் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 373 ஆக உயர்ந்துள்ளது. 

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459