நகைக் கடன் தொடர்பாக தமிழக அரசின் அமைச்சர் அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


29/05/2025

நகைக் கடன் தொடர்பாக தமிழக அரசின் அமைச்சர் அறிவிப்பு

 நகைக் கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி கொண்டு வரும் கட்டுப்பாடுகள் தமிழ்நாடு அரசின் கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறியுள்ளார்.ஆர்.பி.ஐ.யின் நகை கடன் கட்டுப்பாடுகள் பொதுமக்களை கவலைக்கு உள்ளாக்கி இருக்கும் சூழலில், மாநில தொடக்க வேளாண்மை கடன் வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் வருவதில்லை என அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் வங்கிகளுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி ரிசர்வ் வங்கியில் இருந்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. ரிசர்வ் வங்கியின் முதன்மை பொது மேலாளர் தருண் சிங் அனுப்பிய அந்தச் சுற்றறிக்கையில் தங்க நகைக்கடனில் முறைகேடு நடப்பதாகவும் தங்க நகைகளை அடமானம் வைத்து கடன் பெறுவதில் ஒழுங்கற்ற நடைமுறைகள் பின்பற்றப்படுவதாகவும் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் தங்க நகைக்கடன் வழங்குவதில் வங்கிகளுக்கான புதிய வரைவு விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டது மேலும் நகைக்கடனில் முறைகேடு நடப்பதை தடுக்கும் வகையில் நகை வாங்கிய ரசீதைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட புதிய விதிகள் கொண்டு வரப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.


இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் இன்று கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில், துறை அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. தமிழக சட்டப்பேரவையில் துறை சார்பாக அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் தொடர்பாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர் பெரியகருப்பன் துறை ரீதியாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியக்கருப்பன், "சட்டப்பேரவையில் கூட்டுறவுத்துறை சார்பில் 49 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. தற்போது அதன் நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டது. 8 ஆயிரம் சதுர அடியில் தீவுத்திடல் அருகே புதிய கட்டிடம் கட்டவும், அதில் கூட்டுறவு வங்கி மற்றும் நியாய விலை கடை ஆகியவை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் 110000 கோடி ரூபாய் வங்கி பரிவர்த்தனை மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு பயிர்க்கடன் மட்டும் அல்லாமல் புதிய கால்நடைகள் வாங்க கடன் அதிக அளவில் வழங்கப்பட்டு வருகிறது.

 வேலைவாய்ப்பு செய்திகள் 2025

இந்த ஆண்டு பயனாளர்களுக்கு பயிர்க்கடன் வழங்க 17000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது." என்றார்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459