கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் : அரசுக்கு ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை - ஆசிரியர் மலர்

Latest

 




 


11/03/2025

கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் : அரசுக்கு ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை

 நாங்கள் போராடி பெற்ற உரிமைகளை தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் நிறைவேற்றுவதாக அறிவிக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்," என, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.


சங்க மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வி, பொதுச்செயலாளர் ஜெய ராஜ ராஜேஸ்வரன் கூறி யிருப்பதாவது: தமிழக அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வாக்குறுதி கொடுத்தது. ஆனால் இன்று மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த அலுவலர் குழு அமைத்துள்ளது. அக் குழுவை உடனேதிரும்பப் பெற வேண்டும்.


இந்த ஆட்சியாளர்கள் தாக்கல் செய்யும் முழுமையான கடைசி பட்ஜெட் இதுதான். இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால், தொடர் போராட்டங்களைத் திட்ட மிட்டுள்ளோம். நாங்கள் பெறுகிற உரிமைகளும், சலுகைகளும் போராடிப் பெற்றவை. எங்கள் உணர்வைப் புரிந்து தமிழக அரசு இந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும். ஏமாற்ற நினைத்தால் 2026 சட்டசபைத் தேர்தலில் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும்.


எங்கள் கோரிக்கைகளுக்காக, மார்ச் 12 ல் புதிய காப்பீடு திட்டத்தை புதுப்பிக்கையில் ஊழியர்களின் விருப்பம் கேட்க வேண்டும் என, மாவட்டக் கருவூலகங்களில் ஆர்ப்பாட்டம், மார்ச் 13 ல் சி.பி எஸ்., ஒழிப்பு இயக்கத்தினர் மாவட்டத் தலைநகரங்களில் மறியல், மார்ச் 19ல் தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்புக் காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர்களுக்கு வாழ்வூதியம் கோரி கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.


மேலும் ஏப்.17ல் வாழ்வூதியம் கோரி மாவட்டத் தலைநகரங்களில் பேரணி நடத்துவது, ஏப்.24 ல் காப்பீடு திட்டத்தை புதுப் பிக்கும் போது ஊழியர்களின் விருப்புரிமை கேட்க சென்னை கருவூலக் கணக்குத் துறை ஆணையர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என ஈரோட்டில் நடந்த மாநில செயற்குழுவில் வெடுத்துள்ளோம் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459