நான் முதல்வன் திட்டம்: வங்கி -இரயில்வே பணிகளுக்கு இலவச பயிற்சி - ஆசிரியர் மலர்

Latest

09/06/2024

நான் முதல்வன் திட்டம்: வங்கி -இரயில்வே பணிகளுக்கு இலவச பயிற்சி

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் 2024-2025-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் உரையில் அறிவிக்கப்பட்டபடி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் அதன் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக “நான் முதல்வன் ரெயில்வே மற்றும் வங்கிப் பணிகளுக்கான 6 மாத கால கட்டணமில்லா உறைவிடப் பயிற்சியினை” தொடங்க உள்ளது. இப்பயிற்சிக்கான 1000 பயனாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக அடுத்த மாதம் (ஜூலை) 14-ந்தேதி இருவேறு நுழைவுத் தேர்வுகளை நடத்தவுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாணவர்கள் வங்கித்


தேர்வுக்களுக்கான பயிற்சி அல்லது ரெயில்வே தேர்வுக்களுக்கான பயிற்சி, இவற்றில் ஏதேனும் ஒன்றுக்கு மட்டுமே பயிற்சி மேற்கொள்ள முடியும். இந்த நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மாணவர்கள், https://www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விரிவான அறிவிக்கையைப் படித்துப் பார்த்து, இன்று (சனிக்கிழமை) முதல் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 23-ந்தேதி ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459