நாடாளுமன்ற தேர்தலும்... ஆசிரியர்களின் எதிர்பார்ப்பும்! - ஆசிரியர் மலர்

Latest

22/03/2024

நாடாளுமன்ற தேர்தலும்... ஆசிரியர்களின் எதிர்பார்ப்பும்!


 இந்தியாவின்  18வது நாடாளுமன்ற தேர்தல் தமிழ் நாட்டில் ஏப்ரல் 19 அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. மக் களவைத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் 10.5 லட்சம் வாக் குச்சாவடிகள் அமைக்கப்படும் என் றும், தேர்தல் பணியில் 1.5 கோடி அலுவலர்கள் ஈடுபட உள்ளனர் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் 68,144 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படுகிறது. சுமார் 4 லட்சம் பேர் தேர்தல் பணியில் ஈடுபடு கின்றனர். இதில் மாநிலம் முழுவதும் உள்ள ஆசிரி யர்கள் பங்களிப்பு கூடுதலாகும். இந் நிலையில், வாக்குச் சாவடி மைய அலுவலர்களுக்கான முதல்கட்ட தேர்தல் பயிற்சி வகுப்புகளுக்கான முன்னேற்பாடுகள் அனைத்தையும் மிகத்துரிதமாக மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.


இச்சூழலில், கடந்த கால கசப் பான அனுபவங்கள் அடிப்படை யில் தற்போது அவை தொடராமல் இருக்க பல்வேறு ஆசிரியர் சங்கங் கள் மாநில தலைமைத் தேர்தல் ஆணையர் அவர்களுக்குக் கோரிக்கைகள் அடங்கிய மனு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.


இதுகுறித்து கோட் டூர் எஜூவாய்ஸ் அமைப்பின் ஒருங்கி ணைப்பாளர் கல்வியாளர் மணிகணேசன் கூறி யது, வாக்குச்சாவடியின் வாக்குப்பதிவு தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பணி நியமனம் தற்போது வகிக்கும் பதவி மற்றும் ஊதிய விகித அடிப்படை யில் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். பதவியிலும் ஊதியத் திலும் ஏற்கனவே மின்னணு வாக் குப்பதிவு இயந்திரங்களை திறம் பட கையாண்ட அனுபவத்தின் அடிப்படையிலும் பணிநியமனம் செய்யப்பட வேண்டும்

TEACHERS NEWS
என்று பல கோரிக்கையை தேர்தல் ஆணை கவனத்தில் கொள்வது நல்லது.


 அது போல், தேர்வுப்பணி. விடைத்தாள்கள் திருத்துதல் பணி மற்றும் கல்வியாண்டு இறுதிப் பணி ஆகியவற்றில் தொடர்ந்து ஓய்வின்றி இயங்கி வரும் ஆசிரியர்களுக்கு வார விடுமுறை ஓய்வு நாள்களில் பயிற்சி வகுப்புகள் நடத்துவதை மனிதாபிமானம் கருதி தவிர்த்து உதவிடுதல் அவசியமாகும். வழக கம் போலவே, இந்த முறையும் தேர்தல் பணியில் அதிகளவில் ஈடு படுபவர்களாகப் பெண் ஆசிரியைகள் உள்ளனர். எனவே, தேர்தல் பணிகள் மற்றும் பயிற்சி வகுப்புகளில் கட்டாயம் கலந்து கொள் ளும் பொருட்டு தொலைதூர மையங்களிலும் போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாத குக்கிராமப் பள்ளிகளிலும் பணிபு ரிய நிர்ப்பந்தம் செய்வ தைக் கனிவுடன் பரிசீ லிக்க வேண்டும்.


மேலும், இந்த இடங்க ளில் தேவையான அடிப் படை வசதிகள் இருப்ப தையும் அவ்வாறு இல்லாத

பட்சத்தில் ஏற்படுத்தித் தருவதை யும் உறுதிப்படுத்துவது தேர்தல் நடத்துபவர்களின் தலையாயக்கட மையாகும். தேர்தல் பணியில் ஈடுப டும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவ ருக்கும் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்து விபத்து காரணமாக ஏற்ப டும் உயிர் இழப்புகளை சுவனத்தில் கொண்டு ரூ.50 லட்சம் விபத்துக் காப்பீடு இலவசமாக வழங்கப்படு தல் வேண்டும்.


அதுபோல், தேர்தல் பணியிலி ருந்து முழுவிலக்கு அளிக்கப்பட்ட வர்கள் அன்றி ஏனையோருக்கு தகுந்த மருத்துவ காரணங்களையும் வேண்டுகோள்களையும் முற்றிலும் புறந்தள்ளி வீண் அலைச்சலுக்கும் மனஉளைச்சலுக்கும் ஆளாக்காமல் அத்தகையோருக்கும் மனிதாபிமா னம் கருதி தேர்தல் பணியிலிருந்து விலக்கு வழங்கப்பட வேண்டும்.


மேலும், நூறு விழுக்காடு அஞ் சல் வாக்குப்பதிவை தேர்தல் பணி யில் ஈடுபடு பவர்களுக்கும் சென்ற முறை போன்று இந்தத் தடவையும் உறுதிப்படுத்தும் வகையில் தேர்தல் பயிற்சி வகுப்பு மையங்களில் உரிய மக்களவைத் தொகுதிக்கான வாக் குச்சேகரிப்புப் சேகரிப்புப்பெட்டிகள் வைத்து உதவ அந்தந்த மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.


தேர்தல் பணி என்பது ஒரு தேசி யப் பணிதான்.


புரிகிறது. அதேவே ளையில், தேர்தல் பணியில் ஈடுபடும் முன்கள வீரர்களையும் கொஞ்சம் கவனத்தில் கொள்வதும் முக்கியம் அல்லவா? இது ஒவ்வொரு ஆசிரிய ரின் பணிவான வேண்டுகோளும் எதிர்பார்ப்பும் ஆகும் என்றார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459