கோடைகாலத்தில் முலாம் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் - ஆசிரியர் மலர்

Latest

14/03/2024

கோடைகாலத்தில் முலாம் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

 தென் ஆப்ரிக்கப் பகுதியை தாயகமாகக்கொண்ட முலாம்பழத்தில் புரதச் சத்து, நீர்ச்சத்து, உலோகச்சத்து மற்றும் கொழுப்பு, நார்ச்சத்து, மாவுச்சத்து, சுண்ணாம் புச்சத்து, பாஸ்பரஸ் இரும்பு, தயாமின், ரிபோ பிளேவின், நியாசின் மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம், தாமிரம், கந்தகம், குளோரின் மற்றும் ஆக்சாலிக் அமிலம் போன்றவைகள் அடங்கியுள்ளன.


மருத்துவப் பயன்கள்: முலாம்பழத்தை உண்டு வர மலச்சிக்கல் நீங்கும் முலாம்பழம் சிறுநீரை பெருக்கி, உடலில் வெம்மையை தணித்து குளிர்ச்சியூட்டும். சிறுநீரகக் கோளா றுகள், நீர்க்கடுப்பு இவற்றைக் குணப்படுத்தும் மற்றும் சிறுநீரகக் கற்களை கரைக்கும் தன்மை உடையது.


முலாம்பழத்தின் பழச்சாறு தாகத்தை தீர்த்து, தொண்டைவலியை குணப்படுத்தும். பழ சர்பத்தோடு இனிப்பு அருந்திவர சொறி, சிரங்கு மாறும். இருமல், ஆஸ்துமாவை குணப்படுத்தும்.


முலாம்பழத்தின் பழச்சாறு பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் சுரப்பை கூட்டும்.


பழத்தை கூழாக்கி எக்சிமா எனப் படும் தோல் நோய் மேல் தேய்த்துவரவிரைவில் நோய் குணமாகும்.


பழச்சதையோடு சர்க்கரை, பால் சேர்த்து சாப்பிட கோடைக் கால வெம்மை தணியும். தலைச்சூடு குறையும்.


முலாம் பழத்தின் விதைகளை சேகரித்து, காயவைத்துப் பொடித்து உண்ண, வயிற்றுப் புழுக்கள் விலகும். விதைகளை அரைத்து முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மேல் பூசிவர கரும்புள்ளிகள் மாறும்.


முலாம் பழத்தின் காயை கூட்டு போன்று சமைத்து உண்ண சுவையாக இருக்கும். முலாம்பழக் கொடியின் வேரை கஷாயம்


செய்து குடித்தால், வாந்தியை நிறுத்தும். பழத்தை பால்விட்டு பிசைந்து முகத்தில் பூசி, ஊறிய பின் கழுவி வர, முகம் பளபளப் பாகும். கோடையினால் ஏற்பட்ட தோல் சுருக்கம் மாறும்.


முலாம்பழம் கல்லீரல் வீக்கத்தை குறைக்கும். கீல் வாதத்தை குணப்ப டுத்தும். கண் எரிச்சல், கண்சூடு மாறி கண் குளிர்ச்சி பெறும்.


வெப்பத்தால் ஏற்படும் சிறுநீர்த்தாரை எரிச்சலை இப்பழம் குணப்படுத்தும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459