பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இன்று முதல் கோடை விடுமுறை - ஆசிரியர் மலர்

Latest

05/05/2023

பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இன்று முதல் கோடை விடுமுறை


dote.JPG?w=330&dpr=3

பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை முதல் கோடை விடுமுறை விடப்படுவதாக தொழில்நுட்பக்கல்வித்துறை அறிவித்துள்ளது.


இது தொடா்பாக தொழில்நுட்பக்கல்வி இயக்குநா் இரா.லலிதா, அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளின் முதல்வா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:Join Telegram

 தொழில்நுட்பக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், சிறப்புக் கல்லூரிகள், அரசு நிதியுதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள், ஆசிரியா்கள் அல்லாத பணியாளா்களுக்கு மே 5 முதல் ஜுன் 11 முடிய 39 நாள்கள் கோடைகால பருவ விடுமுறை விடப்படுகிறது.


கோடைவிடுமுறைக்குப் பின் ஜுன் 12-ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் கல்லூரிகள் மீண்டும் செயல்படத் தொடங்கும். தோ்வுப் பணி மற்றும் மைய மதிப்பீட்டு பணிக்காக நியமிக்கப்பட்ட ஆசிரியா்களுக்கு தோ்வுப் பணிகள் முடிந்த நாளுக்குப் பிறகே பருவ விடுமுறையை அனுபவிக்க கல்லூரி முதல்வா்கள் அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459