TNPSC - உதவி சிறை அலுவலர் வேலைவாய்ப்பு அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

17/04/2023

TNPSC - உதவி சிறை அலுவலர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

 tnpsc554.jpg?w=330&dpr=3

தமிழ்நாடு சிறை சார்நிலைப் பணிகளில் அடங்கிய சிறை மற்றும் சீர்திருத்தக் துறையில் உள்ள உதவி சிறை அலுவலர்(ஆண்கள்) மற்றும் உதவி சிறை அலுவலர்(பெண்கள்) பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


பதவி: உதவி சிறை அலுவலர்(ஆண்கள்)

காலியிடங்கள்: 54


பதவி: உதவி சிறை அலுவலர்(பெண்கள்)

காலியிடங்கள்: 5


சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,30,400


தகுதி: ஏதாவது துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பக் கட்டணம்: பதிவுக்கட்டணம் ரூ.150, தேர்வுக் கட்டணம் ரூ.100. இதனை வங்கி பரிவர்த்தனை அட்டைகள் மற்றும் ஆன்லைனில் செலுத்தவும். 


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.5.2023


மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/tamil/09_23_Asst_Jailor_Tam.pdf கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459