சுகாதார அலுவலர் பதவிக்கான தேர்வு கணினி வழியில் சென்னையில் நாளை நடக்கிறது. 12 பதவிகளுக்கு நடத்தப்படும் தேர்வை 593 பேர் எழுதுகின்றனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி)தமிழ்நாடு பொது சுகாதார பணிகளில் அடங்கிய 12 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு அக்டோபர் 21ம் தேதி வெளியிட்டது. இத்தேர்வுக்கு 593 பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர். இதில் ஆண்கள் 327 பேர், பெண்கள் 266 பேர் அடங்குவர். இப்பதவிகளுக்கான கணினி வழி தேர்வு 13ம் தேதி(நாளை) நடக்கிறது.
காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை முதல் தாள் தேர்வு நடக்கிறது. முதல் தாள் தேர்வில் கம்யூனிட்டி மெடிசின்(பட்டப்படிப்பு தரம்) தேர்வு நடைபெறுகிறது.
No comments:
Post a Comment