4,000 ஆசிரியர்களுக்கு பணி வரன்முறை 11 ஆண்டு கோரிக்கைக்கு விடிவு - ஆசிரியர் மலர்

Latest

01/11/2022

4,000 ஆசிரியர்களுக்கு பணி வரன்முறை 11 ஆண்டு கோரிக்கைக்கு விடிவு


 அரசு பள்ளிகளில், 11 ஆண்டுகளுக்கு முன் நியமிக்கப்பட்ட, 4,000 ஆசிரியர்களை பணி வரன்முறை செய்து, பள்ளிக்கல்விதுறை உத்தரவிட்டுள்ளது.



தமிழகத்தில், தொடக்க கல்வி இயக்குனரகத்தின் கீழ் செயல்படும். தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி களின் ஆசிரியர்களாக, 4,000 பேர் டி.ஆர்,.பி., வழியே, 2010 1ம் ஆண்டுகளில் நியமிக்கப் பட்டனர்.


இவர்களுக்கு, சான்றி தழ் உண்மைத்தன்மை ஆய்வு மற்றும் இரண்டு ஆண்டு பயிற்சிக்காலம் முடிந்ததும், பணி வரன்முறை உத்தரவு வழங்கப் பட்டு இருக்க வேண்டும்.


ஆனால், பல்வேறு நிர்வாக காரணங்களால், பணி வரன்முறை செய்யப் படவில்லை. அதனால், சம்பந்தப்பட்ட ஆசிரியர் கள், தங்களுக்கான தேர்வு நிலை ஊதிய உயர்வை பெற முடியாத நிலை ஏற் பட்டது.


இந்நிலையில், 11 ஆண்டுகளாக பல்வேறு நீதிமன்ற வழக்கு தொடர்ந் தும் மற்றும் கோரிக்கை மனுக்களை அளித்து வந்த 4,000 ஆசிரியர்களுக்கு, நேற்று பணி வரன்முறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


தொடக்க கல்வி இயக் குனர் அறிவொளி இதற் கான உத்தரவை பிறப் பித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார் 


இந்த உத்தரவின்படி, 2010 ஆக., 23க்கு முன் பணி நியமன விளம்பரம் வெளியாகி, அதில் நேரடி நியமனம் பெற்ற ஆசிரியர் கள், ஆசிரியர் தகுதி தேர் வான 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய அவசியம் இல்லை என்ற சட்ட விளக்கமும், இந்த உத்தரவில் குறிப்பிடப் பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459