சருமம் வறட்சியடைவதை தடுக்கும் இயற்கை வழிமுறைகள் - ஆசிரியர் மலர்

Latest

02/10/2022

சருமம் வறட்சியடைவதை தடுக்கும் இயற்கை வழிமுறைகள்

👉 சிலருக்கு சருமம் அதிகமாக வறட்சி அடைந்தால், கடுமையான அரிப்புக்கள் ஏற்படும். குறிப்பாக குளிர்காலத்தில் இப்பிரச்சனையால் நிறைய பேர் அவஸ்தைப்படுவார்கள். அதுவும் வறட்சியான சருமம் கொண்டவர்கள், அதிகமாக இப்பிரச்சனையால் கஷடப்படுவார்கள். 


👉 இதற்காக எத்தனையோ மாய்ஸ்சுரைசர்களை மாற்றியும் இருப்பார்கள். ஆனால் எவ்வித பலனும் கிடைத்திருக்காது. மாறாக, நிலைமை மோசமாகித் தான் இருக்கும்.


👉 இப்பிரச்சனைக்கு இயற்கை வழியில் தீர்வுகளை எளிதில் காணலாம். அதனை தினமும் பின்பற்றினால், சரும வறட்சி நீங்கி, அரிப்புக்கள் தடுக்கப்பட்டு, சருமம் மென்மையாகவும் இருக்கும்.


இயற்கை வழி தீர்வுகள் :


👉 கற்றாழை ஜெல் சரும வறட்சியைப் போக்கி, சருமத்தை மென்மையாக்கும் சக்தியைக் கொண்டவை. எனவே தினமும் இரவில் படுக்கும் போது, சருமத்தில் கற்றாழை ஜெல்லைத் தடவி வர, சரும வறட்சி தடுக்கப்பட்டு, அரிப்புக்களும் நீங்கும்.


👉 வைட்டமின் நு கேப்ஸ்யு+லில் உள்ள எண்ணெயை சருமத்தில் தடவி வந்தாலும், வறட்சியினால் ஏற்படும் சரும அரிப்புக்களை முழுமையாகத் தடுக்கலாம்.


👉 இரவில் படுக்கும் முன், கை, கால்களுக்கு பெட்ரோலியம் ஜெல்லைத் தடவி ஊற வைத்து வந்தால், சருமம் வறட்சி அடைவது தடுக்கப்படுவதோடு, சருமத்தின் மென்மைத்தன்மையும் அதிகரிக்கும்.


👉 உதட்டைச் சுற்றி வறட்சி அதிகரித்தால், அப்பகுதியில் லிப் பாமை உபயோகப்படுத்துங்கள். அதிலும் தினமும் இரவில் படுக்கும் முன் லிப் பாமைப் பயன்படுத்தினால், வறட்சி தடுக்கப்படும்.


👉 இரவில் படுக்கும் முன் தேங்காய் எண்ணெயை கை, கால்களுக்கு தடவி வந்தால், வறட்சி நீங்கி, சருமத்தில் அரிப்புகள் ஏற்படுவது தடுக்கப்படும்.


👉 கொக்கோ வெண்ணெய் நல்ல நறுமணத்தை மட்டும் கொண்டிருப்பதில்லை, சருமத்தை ஆழமாகவும் ஈரப்பசையு+ட்டும். எனவே உங்களுக்கு சருமம் அதிகமாக வறட்சி அடைந்தால், இரவில் படுக்கும் முன் கொக்கோ வெண்ணெயை சருமத்தில் தடவுங்கள். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459