2760 ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு - ஆசிரியர் மலர்

Latest

31/10/2022

2760 ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு

 தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளில், தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி மற்றும் முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள், தற்காலிக அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இந்த பணியிடங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, அவ்வப்போது பணி நீட்டிப்பு வழங்கப்படும்.

இதன்படி, மேல்நிலைப் பள்ளிகளில் 200 தலைமை ஆசிரியர்; உயர்நிலைப் பள்ளிகளில் 100 தலைமை ஆசிரியர் மற்றும் 2,460 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு, கடந்த ஆண்டே பணிக் காலம் முடிந்த நிலையில், இந்த ஆண்டு டிச., 31 வரை பணி நீட்டிப்பு வழங்கி, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459