10ம் வகுப்பு அசல் சான்றிதழ் இன்று பள்ளிகளில் பெறலாம் - ஆசிரியர் மலர்

Latest

14/10/2022

10ம் வகுப்பு அசல் சான்றிதழ் இன்று பள்ளிகளில் பெறலாம்

 பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், இன்று வழங்கப்படுகின்றன.


தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவ - மாணவியருக்கு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ஏற்கனவே வழங்கப்பட்டது.


இந்நிலையில், துணை தேர்வு முடிவு மற்றும் மறுகூட்டல் முடிவு வெளியான நிலையில், அசல் மதிப்பெண் சான்றிதழ் தயாராகியுள்ளது.


மாணவ - மாணவியர் தாங்கள் படித்த பள்ளிகளில், இன்று காலை 10:00 மணி முதல், தங்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்று கொள்ளலாம்.


தனி தேர்வர்கள், தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில், சான்றிதழ்கள் பெறலாம்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459