தமிழக பள்ளிகளில் ஆர்எஸ்எஸ் வகுப்புகளுக்கு அனுமதி கிடையாது : அமைச்சர் அன்பில் மகேஷ் - ஆசிரியர் மலர்

Latest

24/09/2022

தமிழக பள்ளிகளில் ஆர்எஸ்எஸ் வகுப்புகளுக்கு அனுமதி கிடையாது : அமைச்சர் அன்பில் மகேஷ்

 தமிழக பள்ளிகளில் ஆர்எஸ்எஸ் வகுப்புகளுக்கு அனுமதி கிடையாது எனவும் தஞ்சையில் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் பசுமை இயக்கம் சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமை தாங்கி மரக்கன்றுகள் நட்டு வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசும்போது…; image உக்ரைன் நாட்டில் ஏற்பட்ட போரின்போது அங்கிருந்து தமிழக மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். அதுபோல் தற்போது மியான்மர் நாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை பத்திரமாக மீட்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறார் என்றவரிடம் பாஜக தொடர்ந்து விமர்சனம் செய்து வருவது குறித்து கேட்டதற்கு… ஆக்கப்பூர்வமான கருத்துகளை யார் கூறினாலும் நடவடிக்கை எடுக்கப்படும். மாறாக அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு யாராவது கருத்து கூறினால் அதை பற்றி யோசிக்க வேண்டாம். நாம் தொடர்ந்து மக்களுக்கு நல்லவித பணிகளை செய்வோம் என்று முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். image கும்பகோணம், ஒரத்தநாடு கல்வி மாவட்டங்கள் தொடர்ந்து செயல்படும். தஞ்சாவூர் மற்றும் பட்டுக்கோட்டை கல்வி மாவட்டங்களோடு இணைக்கப்படாது. தமிழக பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். வகுப்புகளுக்கு அனுமதி கிடையாது. ஆனால் பொது இடங்களில் பேரணிக்கு நீதிமன்றத்தில் அனுமதி கேட்டுள்ளார்கள். அதற்கு இறையாண்மைக்கு எதிராக செயல்படக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை நீதிமன்றம் விதித்துள்ளது என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459