ஆசிரியர்களுக்கு பரஸ்பர இடமாறுதல் வழங்க உத்தரவு - ஆசிரியர் மலர்

Latest

19/07/2022

ஆசிரியர்களுக்கு பரஸ்பர இடமாறுதல் வழங்க உத்தரவு

தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில், பரஸ்பர மாறுதல் வழங்க, உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக தொடக்க கல்வி துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, பணி மாறுதல் கவுன்சிலிங், மலை சுழற்சி கவுன்சிலிங் உள்ளிட்டவை நடந்து முடிந்துள்ளன. 


பல மாவட்டங்களில் ஆசிரியர்கள் பரஸ்பரமாக இடம் மாறி கொள்ளும் வகையில், மனமொத்த மாறுதலும் வழங்கப்பட்டன.இந்நிலையில், மனமொத்த மாறுதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கள்ளக்குறிச்சி, ஈரோடு, சேலம், தேனி, திண்டுக்கல், வேலுார், திருப்பத்துார்.தர்மபுரி ஆகிய மாவட்டங்களில், இன்று பரஸ்பர மாறுதலை வழங்க, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, இயக்குனர் அறிவொளி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459