இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல் கலந்தாய்வு இன்றுடன் நிறைவு - ஆசிரியர் மலர்

Latest

19/07/2022

இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல் கலந்தாய்வு இன்றுடன் நிறைவு

மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு ( 19.07.2022 ) 


முன்னுரிமை வரிசை எண் 3776 முதல் 4336 வரை இடம்பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு 19.07.2022 காலை 8.30 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெறும். இந்த முன்னுரிமை வரிசையில் பெயர் இடம்பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்கள் மட்டும் 19.07.2022 அன்று கலந்தாய்வில் கலந்து கொள்ள உரிய அறிவுரைகள் வழங்க வேண்டுமாய் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது.



எனவே , இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல் கலந்தாய்வு இன்றுடன் நிறைவு பெறுகிறது. தொடக்கக் கல்வி பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு நாளை அல்லது நாளை மறுநாள் தொடங்கலாம். அது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகலாம்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459