மொத்தம் உள்ள 11,335 தனியார் பள்ளிகளில் 987 பள்ளிகள் நேற்று இயங்கவில்லை. எச்சரிக்கையை மீறி 987 தனியார் பள்ளிகள் நேற்று விடுமுறை அளித்து தன்னிச்சையாக செயல்பட்டது தெரியவந்துள்ளது. இதனால் மாணவ, மாணவியர்கள் பாதிக்கப்பட்டதால் விடுமுறை அளிக்கப்பட்டதற்கு உரிய விளக்கம் அளிக்கக் கோரி சம்பந்தபட்ட பள்ளிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பள்ளிகளின் விளக்கத்தை பொறுத்து நடவடிக்கை பாயும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வேலை நிறுத்தம் தொடர்பாக பள்ளி கல்வி துறை அதிகாரிகள், தனியார் பள்ளி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சவாத்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்று நாளை முதல் பள்ளிகள் இயக்கப்படும் என்று நிர்வாகிகள் தெரிவித்ததாக பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


No comments:
Post a Comment