அலகு மாறுதல் பெற்ற ஆசிரியர்களை நிபந்தனைகளின் அடிப்படையில் பணியிலிருந்து விடுவிக்க இயக்குநர் உத்தரவு. - ஆசிரியர் மலர்

Latest

30/04/2022

அலகு மாறுதல் பெற்ற ஆசிரியர்களை நிபந்தனைகளின் அடிப்படையில் பணியிலிருந்து விடுவிக்க இயக்குநர் உத்தரவு.

தொடக்கக் கல்வி இயக்கத்தின் கீழ் உள்ள ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசுப் பள்ளி ஆசிரியர்ளுக்கு 2021-2022 -கல்வியாண்டில் தொடக்கக் கல்வி இயக்ககத்திலிருந்து பள்ளிக் கல்வித்துறைக்கு அலகு விட்டு அலகு மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் கீழ்கண்ட நிபந்தனைகளின் அடிப்படையில் பணியிலிருந்து விடுவிக்க அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .


  நிபந்தனைகள் 

1. தொடக்கக் கல்வி இயக்ககத்தின் தடையின்மைச் சான்று பெற்றிருக்க வேண்டும் . 

2. துறை மாறுதலில் அலகு விட்டு அலகு மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை / குற்றவியல் நடவடிக்கை ஏதும் இருத்தல் கூடாது . 

3.துறை மாறுதலில் அலகு விட்டு அலகு மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை ஏதும் இருத்தல் கூடாது . 

மேற்காண் நிபந்தனைகள் சரியாக உள்ள பட்சத்தில் பள்ளிக் கல்வித் துறைக்கு அலகு விட்டு அலகு மாறுதல் பெற்ற ஆசிரியர்களை பணியிலிந்து விடுவிக்க வேண்டும் . மேலே தெரிவித்துள்ள நிபந்தனைகள் பின்பற்றாமல் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டால் அதன் முழுபொறுப்பும் சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலரையே சாரும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459