13.04.2022 ( புதன்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. - ஆசிரியர் மலர்

Latest

02/04/2022

13.04.2022 ( புதன்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

தஞ்சை அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயில் சித்திரை தேர்த்திருவிழாவினை முன்னிட்டு 13.04.2022 அன்று புதன்கிழமை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் , கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்படுகிறது . மேலும் இந்த உள்ளூர் விடுமுறை நாளுக்குப் பதிலாக 2022 ஆம் ஆண்டு மே மாதம் 14 - ம் தேதி ( 14.05.2022 ) சனிக்கிழமை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது . இந்த உள்ளூர் விடுமுறை செலாவணி முறிச் சட்டம் 1881 - இன் கீழ் வராது என்பதால் தஞ்சாவூர் மாவட்டக் கருவூலம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைக் கருவூலங்களும் குறிப்பிட்ட பணியாளர்களுடன் இயங்கும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459