எம்.பி.ஏ., நுழைவுத் தேர்வு மார்ச் 17 வரை விண்ணப்பம் - ஆசிரியர் மலர்

Latest

23/02/2022

எம்.பி.ஏ., நுழைவுத் தேர்வு மார்ச் 17 வரை விண்ணப்பம்

பொது மேலாண்மை படிப்பான எம்.பி.ஏ.,வில் சேர்வதற்கான நுழைவு தேர்வுக்கு, மார்ச் 17க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்டப் படிப்பு



இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள், பட்டப் படிப்பு முடித்தவர்கள், மேலாண்மை பாடத்திற்கான எம்.பி.ஏ., முதுநிலை படிப்பில் சேர்வதற்கு, தேசிய தேர்வு முகமை வழியாக நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. 'சிமேட்' என்ற இந்த தேர்வுக்கான விண்ணப்ப பதிவு, 'ஆன்லைனில்' துவங்கி உள்ளது.

இந்த தேர்வில் பங்கேற்க உள்ளவர்கள், மார்ச் 17ம் தேதிக்குள் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ.,யின் அங்கீகாரம் பெற்ற கல்லுாரிகளில், எம்.பி.ஏ., படிக்க விரும்பும் பட்டதாரிகள், இந்த தேர்வை எழுதலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை, cmat.nta.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459