முதல் திருப்புதல் தேர்வு விடைத்தாட்களை சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு 14.03.2022க்குள் வழங்க அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு. - ஆசிரியர் மலர்

Latest

25/02/2022

முதல் திருப்புதல் தேர்வு விடைத்தாட்களை சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு 14.03.2022க்குள் வழங்க அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு.

முதல் மற்றும் இரண்டாம் திருப்புதல் தேர்வுகள் நடத்துதல் குறித்த வழிகாட்டு முறைகள் வெளியிடப்பட்டன . தற்போது முதல்திருப்புதல் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் மாணவர்களது விடைத்தாட்களை மதிப்பீடு செய்து மதிப்பெண்கள் பட்டியலைச் சம்பந்தப்பட்ட பள்ளிகளிலிருந்து பெற்று முதன்மைக்கல்வி அலுவலர்கள் பாதுகாப்பாக வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


மேலும் , மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாட்களை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்கிடுமாறும் அவ்விடைத்தாட்களை சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு 14.03.2022 - க்குள் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459