அனைத்து ஆசிரியர்களுக்கும் திறன் வலுவூட்டல் பயிற்சி வழங்குவதற்கான கால அட்டவணை பள்ளிக் கல்வித்துறை வெளியீடு. - ஆசிரியர் மலர்

Latest

06/01/2022

அனைத்து ஆசிரியர்களுக்கும் திறன் வலுவூட்டல் பயிற்சி வழங்குவதற்கான கால அட்டவணை பள்ளிக் கல்வித்துறை வெளியீடு.

தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களை மண்டலங்களாகப் பிரித்து , மண்டலங்களில் உள்ள பள்ளிகளில் இயக்குநர்கள் , இணை இயக்குநர்கள் வகுப்பறை உற்றுநோக்கல் மற்றும் பள்ளிப் பார்வையினை மேற்கொண்டுவருகின்றனர். இந்நிலையில் மண்டல அளவில் தஞ்சாவூர் , திருநெல்வேலி , விழுப்புரம் ஆகிய மண்டலங்களில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் வகுப்பறை உற்று நோக்கல் சார்ந்து பெற்ற விவரங்களை ஆய்வு செய்தபோது , மாணவர்களுக்கு கற்றல் அடைவுகளை அடையச் செய்வதற்கான ஆசிரியர்களின் முயற்சிகளை வலுப்படுத்த வேண்டிய அவசியம் கண்டறியப்பட்டது. தமிழ்நாட்டிலுள்ள தொடக்க , நிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலுள்ள ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான பாடவாரியான , மாநிலப் பாடத்திட்டத்திற்கான கற்றல் அடைவுகள் ( Learning Outcomes ) மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் வரையறுக்கப்பட்டு அதனை மாணவர்களுக்கு அடையச் செய்வதற்கான கற்பித்தல் முறைகள் குறித்தும் ஏற்கெனவே பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் இது சார்ந்து ஆசிரியர்களுக்குள்ள சந்தேகங்களை நிவர்த்திக்கும் பொருட்டும் , ஒவ்வொரு பாடத்திற்குமான கற்றல் அடைவுகளை எங்ஙனம் மாணவர்களுக்கு அடையச்செய்வது என்பது குறித்து தெளிவான புரிதலை ஏற்படுத்திக் கொள்ள ஏதுவாக தொடக்க , நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி கட்டாயமாகிறது. ஆசிரியர்களுக்கான பயிற்சி வழங்கும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் : தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி வழங்கப்படும்போது பள்ளியிலுள்ள மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கையை இரண்டாகப் பிரித்துக் கொண்டு பயிற்சியில் பங்கேற்கச் செய்தல் வேண்டும். ஒரு குழு பயிற்சியில் ஈடுபடும்போது , மற்றொரு குழு பள்ளிச் செயல்பாடுகளை மேற்கொள்ளவேண்டும். நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் அவரவர் கற்பிக்கும் பாடத்திற்கான கற்றல் அடைவுப் பயிற்சி நடைபெறும் நாளில் பங்கேற்கச் செய்தல் வேண்டும் . வட்டாரக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர்கள் பயிற்சி நடைபெறுவதை உற்று நோக்குவதுடன் தங்களது முதன்மைப்பாடம் சார்ந்த கற்றல் அடைவு வலுவூட்டல் பயிற்சி நடைபெறும் நாட்களில் அவர்கள் முழுமையாக அப்பயிற்சியில் பங்கேற்கவேண்டும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459