எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஒருநாள் பயிற்சி அளிக்க உத்திரவு. - ஆசிரியர் மலர்

Latest

08/12/2021

எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஒருநாள் பயிற்சி அளிக்க உத்திரவு.

பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களும் புரிந்துணர்வுடன் படிக்கவும் அடிப்படை கணிதத் திறன்களை கொண்டிருப்பதை உறுதி செய்யவும் , எண்ணும் எழுத்தும் பணி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு 9.12.2021 அன்று அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அருகில் உள்ள அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உயர் தொழில் நுட்ப ( Hi - Tech ) ஆய்வகங்கள் மூலம் இணைய வழி பயிற்சி நடைபெறவுள்ளது . இப்பயிற்சிக்கு ஒரு பள்ளியின் 50 % ஆசிரியர்கள் முற்பகலிலும் 50 % ஆசிரியர்கள் பிற்பகலிலும் கலந்து கொள்ளும் வகையில் சார்ந்த CRC மைய பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநரால் பட்டியல் தயாரிக்கப்பட்டு தொடக்க / நடுநிலைப்பள்ளிகளுக்கு தெரிவிக்குமாறு CRC மைய பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் உயர் தொழில் நுட்ப ( Hi - Tech ) ஆய்வகத்தினை தயார்நிலையில் வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459