இந்த பட்டியலில் இருப்பவர்களுக்கு எல்லாம் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படாது -கூட்டுறவுத்துறையின் முக்கிய உத்தரவு - ஆசிரியர் மலர்

Latest

29/12/2021

இந்த பட்டியலில் இருப்பவர்களுக்கு எல்லாம் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படாது -கூட்டுறவுத்துறையின் முக்கிய உத்தரவு

 தற்போது நகைக்கடன் தள்ளுபடி பெறும் பயனாளிகளின் பட்டியலை இறுதி செய்ய அறிவுரைகள் வழங்கி கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது






நகை கடன்கள் தள்ளுபடி என்பது ஒரு குடும்பத்திற்கு ஐந்து பவுனுக்கு உட்பட நகைகளை சில தகுதிகளின் கீழ் உண்மையான ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தள்ளுபடி செய்யப்படும், 

2021ஆம் ஆண்டு பயிர் கடன் தள்ளுபடி பெற்றவர்கள், குடும்ப அட்டையின் படி இடம்பெற்றுள்ள குடும்பத்தினர் நகை கடன் தொகை முழுமையாக செலுத்தியவர்கள் ,

40 கிராமுக்கு மேற்பட்ட நகை கடன் பெற்ற குடும்பத்தினர், 40 கிராமுக்கு மேற்பட்டு நகைக்கடன் பெற்றவர்கள், கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர், 

கூட்டுறவு சங்கங்களில் உள்ள நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் ,குடும்ப அட்டை எண்ணை வழங்காதவர்கள் மற்றும் தவறாக வழங்கியவர்கள் , 

ஆதார் எண்ணை வழங்காதவர்கள் மற்றும் தவறாக வழங்கியவர்கள் , எந்த பொருளும் வேண்டாத குடும்பத்தினர், ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் மூலம் மொத்த எடை 40 கிராமுக்கு கூடுதலாக பெற்ற குடும்ப அட்டைதாரர்கள் ஆகியோர் நகை கடன் தள்ளுபடி பெறாத தேர்வர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459