கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் வாரிசுதாரர்களுக்கு ரூ.50000/- நிதியுதவி பெற ஆன்லைன் மூலம் எவ்வாறு விண்ணப்பிப்பது? தமிழ்நாடு அரசு அறிவிப்பு. - ஆசிரியர் மலர்

Latest

08/12/2021

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் வாரிசுதாரர்களுக்கு ரூ.50000/- நிதியுதவி பெற ஆன்லைன் மூலம் எவ்வாறு விண்ணப்பிப்பது? தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் வாரிசுதாரர்களுக்கு ரூ.50000/- நிதியுதவி பெற ஆன்லைன் மூலம் கீழ்கண்ட இணைப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு! தமிழ்நாடு அரசின் அரசின் சார்பில் கொரோனா பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வாரிசுதாரர்களுக்கு ரூ .50,000 / ( ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும் ) நிதி உதவி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் , உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வாரிசுதாரர்கள் அரசின் இழப்பீட்டு உதவித் தொகை பெறுவதை எளிமையாக்கும் வகையில் https://www.tn.gov.in என்னும் தமிழ்நாடு அரசு இணையதள முகவரியில் " வாட்ஸ் நியூ ( what's new ) பகுதியில் " Ex - Gratia for Covid - 19 " என்னும் விண்ணப்பத்திற்கான இணைப்பை தேர்வுசெய்து , ஆன்லைன் ( Online ) மூலம் விண்ணப்பம் செய்து உதவித் தொகை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459