2022 புத்தாண்டில் கோடீஸ்வரர் ஆக மாறப்போவது யார் தெரியுமா? - ஆசிரியர் மலர்

Latest

31/12/2021

2022 புத்தாண்டில் கோடீஸ்வரர் ஆக மாறப்போவது யார் தெரியுமா?

 2021 முடிந்து 2022ஆம் ஆண்டு பிறக்கப்போகிறது. இந்த புத்தாண்டில் 1,2,3ஆம் எண்களில் பிறந்தவர்களுக்கு எப்படி இருக்கும் என்று பலன்களைக் கணித்து கூறியுள்ளார் எண் கணித நிபு


ணர் டாக்டர் ஜெஎன்எஸ் செல்வன்.கொரோனா பெருந்தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகாலமாகவே மக்களில் பலருக்கும் பொருளாதார நிலை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. வேலையிழப்பு, தொழிற்சாலைகள் மூடல் என பலரது வாழ்க்கையிலும் கசப்பான பக்கங்களை கொடுத்து விட்டது 2020 மற்றும் 2021ஆம் ஆண்டு.2022ஆம் ஆண்டு பிறக்கப் போகிறது. பிறக்கப்போகும் புத்தாண்டு எப்படி இருக்கும் என்று பலருக்கும் ஒருவித எதிர்பார்ப்பு இருக்கலாம். 2022ஆம் ஆண்டில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படப்போகிறது என்பதை துல்லியமாக கணித்து  நேயர்களுக்காக வழங்கியுள்ளார் எண்கணித நிபுணர் டாக்டர் ஜெ.என்.எஸ் செல்வன்.எண் 11,10,19,28 என்ற தேதியில் பிறந்தவர்கள், 1ஆம் எண் கூட்டுத்தொகையில் பிறந்தவர்கள், , , , ,என்ற எழுத்தை பெயரில் முதலாவதாக கொண்டவர்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.இந்த ஆண்டு புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும் நல்ல பலன்கள் கிடைக்கும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். செலவுகளை கட்டுக்குள் வைக்கவும். அனாவசிய செலவுகளை குறைத்துக்கொள்ளவும். சோம்பேறித்தனம் அதிகரிக்கும். அதை குறைத்து சுறுசுறுப்பை அதிகரிக்க வேண்டும். சொந்த பந்தங்களின் எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும். இந்த ஆண்டு சுப செலவுகள் அதிகரிக்கும். வீட்டில் குழந்தைகளின், கல்வி, வேலை திருமணம் நடைபெறும். கல்விக்கு அதிக செலவு செய்வீர்கள். சொந்த பந்தங்களின் எதிர்ப்பை சம்பாதிப்பீர்கள். நீதி நேர்மை என்று பேசுவீர்கள். உறவினர்களிடையே சண்டை சச்சரவுகள் வரும். விட்டுக்கொடுத்து செல்லவும்.உடல் ஆரோக்கியத்தில் கவனம். உடற்பயிற்சி அவசியம் செய்ய வேண்டும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும்.இரண்டாம் எண்2,11, 20, 29, தேதிகளில் பிறந்தவர்களுக்கும் 2ஆம் எண்ணில் பெயர் கூட்டுத்தொகை அமைந்தவர்களுக்கும், , ,என்ற எழுத்தை பெயரில் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும் இந்த ஆண்டு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.இந்த ஆண்டு நீங்கள் நினைத்தது நிறைவேறும். உங்களின் பேச்சிற்கு மதிப்பு கிடைக்கும். உங்களின் செயல்களில் மாபெரும் வெற்றி கிடைக்கும். இந்த ஆண்டு குடும்பத்திலும் வேலை செய்யும் இடத்திலும் உங்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும்.கோடீஸ்வரர் ஆகும் வாய்ப்புகோடீஸ்வரர்கள் ஆகும் வாய்ப்பு உள்ளது. ஏழாம் எண்ணுடன் பிறந்தவர்களுடன் இணைந்து தொழில் செய்வது நல்லது. மிகப்பெரிய வெற்றியைத் தேடி தருவார்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் மிகப்பெரிய செல்வாக்கை பெண் குழந்தைகள் மூலம் பெறப்போகிறீர்கள். அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.செய்யும் தொழிலில் லாபம் இரட்டிப்பாக கிடைக்கும். வருமானம் நிறைய கிடைக்கும். ஆடை தயாரிப்பாளர்கள், பெண்களை கவரும் தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.3ஆம் எண்ணில் பிறந்தவர்கள்3,12,21,30 எண்ணில் பிறந்தவர்களுக்கும் 3ஆம் எண்ணை கூட்டுத்தொகையாக கொண்டவர்களுக்கும்,என்ற எழுத்தை பெயரில் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும் இந்த 2022ஆம் புத்தாண்டு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். நீதி நேர்மையான குணம் கொண்டவர்கள். நிதானமாக அடி எடுத்து வைக்கவும். கடந்த காலங்களில் செய்த வேலைகளுக்கு பலன் கிடைக்கும். புதிய முயற்சிகளில் கவனமும் நிதானமும் தேவை. பொருளாதார நிலை நன்றாக இருந்தாலும் சுப செலவுகள் அதிகரிக்கும். கல்விச்செலவுகள் வரும். நீரிழிவு நோயை அதிகரிக்கும் உணவுப்பொருட்களை சேர்க்க வேண்டாம். தொழில் வளம் அதிகரிக்கும். ஆறாம் எண் காரர்களுடன் பழகும் போது கவனம் தேவை. அரசியல்வாதிகள் தலைமை பதவியில் இருப்பவர்களுடன் கவனமாக இருப்பது நல்லது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459