பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் படிப்புகளுக்கு : விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க நாளை கடைசி - ஆசிரியர் மலர்

Latest

09/11/2021

பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் படிப்புகளுக்கு : விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க நாளை கடைசி

 தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம், பிபிடி உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த 19 வகையான துணை பட்டப்படிப்புகள் உள்ளன. இப்படிப்புகளுக்கான 2021-22-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு நேற்று மாலை5 மணியுடன் நிறைவடைந்த நிலையில், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தகுந்த ஆவணங்களுடன் செயலாளர், தேர்வுக் குழு, எண்.162, ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை 600010 என்ற முகவரியில் நவ.10-ம் தேதி (நாளை) மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

“மழையால் போனபைட் சான்றிதழைப் பெற முடியாத மாணவ, மாணவிகள், மாணவர் சேர்க்கை கலந்தாய்வின்போது, ‘போனபைட்’ சான்றிதழை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்’’ என்று மருத்துவக்கல்வி இயக்குநரக அதிகாரிகள் தெரிவித்தனர்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459