பெருந்தலைவர் காமராஜர் விருதுக்கு தகுதியான மாணவர்கள் விபரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு! - ஆசிரியர் மலர்

Latest

19/11/2021

பெருந்தலைவர் காமராஜர் விருதுக்கு தகுதியான மாணவர்கள் விபரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களிடையே , தமிழ் வழியில் பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்களில் ஒரு மாவட்டத்திற்கு 10 ஆம் வகுப்பில் 15 மாணவர்கள் ( ரொக்கப்பரிசு தலா ரூ .10000 / - & பாராட்டு சான்றிதழ் ) மற்றும் 12 ஆம் வகுப்பில் 15 மாணவர்கள் ( ரொக்கப்பரிசு தலா ரூ .20000 / - & பாராட்டு சான்றிதழ் ) வீதம் தேர்ந்தெடுத்து சிறந்த மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்கி மாணவர்களின் கல்வி மற்றும் தனித் திறன்களை ஊக்குவிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


 எனவே கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது 01.09.2021 முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு முடிய பள்ளிகள்் > செயல்பட்டு வருவதால் நடப்புக் ( 2021-2022 ) கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தமிழ்வழியில் பயிலும் மாணவ , மாணவியரின் தேர்ச்சி முடிவுகளை எதிர்நோக்கி , அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள நெறிமுறைகளுக்குட்பட்டு அவர்களது இணை செயல்பாடுகளைக் கண்டறியும் வகையில் உரிய போட்டிகளை நடத்தி அதன் முடிவுகள் குறித்த விவரங்களை சேகரித்து தயாராக வைத்திருக்குமாறும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459