B.E., பருவத் தேர்வுகள் இரு வாரங்களுக்கு ஒத்திவைப்பு - அண்ணா பல்கலை. - ஆசிரியர் மலர்

Latest

19/11/2021

B.E., பருவத் தேர்வுகள் இரு வாரங்களுக்கு ஒத்திவைப்பு - அண்ணா பல்கலை.

தமிழகத்தில் B.E., மாணவா்களுக்கு நிகழாண்டு மார்ச் - ஏப்ரல் பருவத் தேர்வுகள் இணையவழியில் நடைபெற்றது. CORONA பரவலை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு முதல் இந்த நடைமுறை இருந்து வந்தது.

தற்போது நோய்த்தொற்று குறைந்துள்ள நிலையில் வருகின்ற நவம்பா் - டிசம்பா் மாத பருவத் தேர்வுகள் நேரடி முறையில் எழுத்துத் தேர்வு டிச.13ம் தேதியும் , செய்முறைத் தேர்வு நவ.29ம் தேதியும் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. இதற்கிடையே நேரடி முறையில் நடைபெறவுள்ளதால் தேர்வுக்கு தயாராக கூடுதல் கால அவகாசம் வேண்டுமென மாணவா்கள் கோரிக்கை விடுத்தனா். அதையேற்று செய்முறை மற்றும் பருவத்தேர்வுகளை 2 வாரங்களுக்கு ஒத்தி வைப்பதாக அண்ணா பல்கலை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459