Go.91.13.09.21- அரசுப் பணிகளில் நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்யப்படுவதற்கான வயது உச்சவரம்பினை உயர்த்தி அரசாணை வெளியீடு! - ஆசிரியர் மலர்

Latest

16/09/2021

Go.91.13.09.21- அரசுப் பணிகளில் நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்யப்படுவதற்கான வயது உச்சவரம்பினை உயர்த்தி அரசாணை வெளியீடு!

  

IMG_20210916_183724

ஆணை 

GO NO : 91 ,Date. : 13.09.2021 - Download here... 

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் , 13.09.2021 அன்று நடைபெற்ற 2021-2022 - ஆம் ஆண்டிற்கான மனிதவள மேலாண்மைத் துறையின் மானியக் கோரிக்கையின் போது , கொரோனா பெருந்தொற்று காரணமாக , பணியாளர் தெரிவு முகமைகளால் நடத்தப்படும் அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் தாமதமானதால் , நேரடி நியமன வயது உச்ச வரம்பு இரண்டு ஆண்டுகள் உயர்த்தப்படும் என மாண்புமிகு அமைச்சர் , நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அவர்களால் அறிவிப்பு வெளியிடப்பட்டது . 


2 மாண்புமிகு அமைச்சர் , நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அவர்களின் மேற்குறிப்பிட்ட அறிவிப்பிற்கிணங்க , பின்வருமாறு ஆணைகள் வெளியிடப்படுகின்றன : i ) அரசுப் பணிகளில் நேரடி நியமனம் மூலம் பணி நியமனம் செய்யப்படுவதற்கான வயது உச்ச வரம்பு , தற்போதுள்ள 30 ஆண்டுகளிலிருந்து 32 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459