ஆசிரியர் பணி நியமனத்துக்கான வயது வரம்பை உயர்த்தக் கோரி, முதுநிலை பட்டதாரிகள் போராட்டம் நடத்தினர்.
தமிழக அரசு பள்ளிகளில், முதுநிலை ஆசிரியர் பணியில் 2,207 இடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்வுக்கு, 19ம் தேதி முதல் 'ஆன்லைன்' பதிவு துவங்கியது.
தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பொதுப் பிரிவினர் என்றால், 40; மற்ற பிரிவினருக்கு 45 வயதுக்கு மேல் இருக்கக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு, பட்டதாரிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.அதனால், முதுநிலை பட்டதாரிகள் குழுவினர், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வி அலுவலக வளாகத்தின் நுழைவாயிலில் அமர்ந்து, நேற்று தர்ணா போராட்டம் நடத்தினர்
No comments:
Post a Comment