ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி வழங்க ஒரு பள்ளிக்கு ஒரு ஆசிரியர் வீதம் பட்டியல் அனுப்ப AWD உத்தரவு. - ஆசிரியர் மலர்

Latest

29/09/2021

ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி வழங்க ஒரு பள்ளிக்கு ஒரு ஆசிரியர் வீதம் பட்டியல் அனுப்ப AWD உத்தரவு.

 

.com/img/a/

ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் தொடக்கப்பள்ளிகள் 822 நடுநிலைப்பபள்ளிகள் 99 உயர்நிலைப்பள்ளிகள் 108 மேல்நிலைப்பள்ளிகள் 98 எண்ணிக்கையில் செயல்பட்டு வருகின்றன.
 ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு ஆங்கில வழியாக பேசுவதற்கு பெற்றோர்களும் மற்றும் மாணவ / மாணவியர்களும் மிகுந்த ஆர்வமாக உள்ளனர். எனவே மாணவ / மாணவியர்களுக்கு Spoken English ஆங்கில பேச்சு திறமையை வளர்க்க , ஒவ்வொரு ஆரம்ப , நடுநிலை , உயர்நிலை , மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஒரு பள்ளிக்கு ஒரு ஆசிரியர் வீதம் அவர்களது கைப்பேசி ( Whats app ) மூலமாக பயிற்சி தொண்டு நிறுவனம் அல்லது volunteers மூலமாக பயிற்சி வழங்கப்படவுள்ளன.

எனவே , ஒவ்வொரு ஆசிரியர்களுக்கு கைப்பேசி ( Whats app ) மூலமாக பயிற்சி வழங்குவதற்கு ஆரம்ப , நடுநிலை , உயர்நிலை , மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் பயிற்சி பெறும் ஆசிரியர் பெயர் மற்றும் அவருடைய கைப்பேசி எண் ( Whats app No ) ஆகியவைகளை இக்கடிதத்துடன் இணைத்து மின்னஞ்சல் மூலமாக அனுப்பும் Google sheet படிவம் மூலமாக 29.09.2021 க்குள் காலதாமதத்தை தவிர்த்து உடனே அனுப்பிடக்கோரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மற்றும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459