இன்று(20.09.2021) நடைபெறவிருந்த BRTE இடமாறுதல் கலந்தாய்வு நிர்வாக காரணங்களுக்காக தள்ளி வைக்கப்பட்டுள்ளது - பள்ளிக் கல்வித்துறை - ஆசிரியர் மலர்

Latest

20/09/2021

இன்று(20.09.2021) நடைபெறவிருந்த BRTE இடமாறுதல் கலந்தாய்வு நிர்வாக காரணங்களுக்காக தள்ளி வைக்கப்பட்டுள்ளது - பள்ளிக் கல்வித்துறை

  

இன்று (20.09.2021) நடைபெறவிருந்த BRT இடமாறுதல் கலந்தாய்வு நிர்வாக காரணங்களுக்காக தள்ளி வைக்கப்பட்டுள்ளது - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!

IMG-20210919-WA0015

500 பள்ளிக் கல்வித் துறையில் 2021-2022ம் கல்வி ஆண்டிற்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் மாநில மற்றும் மாவட்டத் திட்ட அலுவலகங்கள் , வட்டார மற்றும் தொகுப்பு வளமையங்களில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்குப் பணிமாறுதல் / பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துதல் சார்பாக பார்வை ( 1 ) ல் கண்டுள்ளபடி நெறிமுறைகள் வகுத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


முதல் கட்டமாக ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களில் பட்டதாரி ஆசிரியர்களாகப் பணிமாறுதல் கலந்தாய்வு 15.09.2021 அன்று நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக அரசாணையில் வெளியிடப்பட்டுள்ள நெறிமுறைகளைப் பின்பற்றி பொது மாறுதல் கலந்தாய்வினை 20.9.2021 அன்று நடத்திடத் திட்டமிட்டு பார்வை -2 ல் காணும் செயல்முறைகள் வாயிலாக அறிவுரைகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. 


தற்போதைய நிலையில் நிருவாகக் காரணங்களின் அடிப்படையில் 20.9.2021 அன்று நடைபெறவிருந்த ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு தள்ளி வைக்கப்படுகிறது . பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் நாள் குறித்த விவரம் பின்னர் அறிவிக்கப்படும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459