பள்ளிகள் திறப்பில் மத்திய மாநில அரசுகள் நிதானம் காட்ட வேண்டும் - எய்ம்ஸ். - ஆசிரியர் மலர்

Latest

29/08/2021

பள்ளிகள் திறப்பில் மத்திய மாநில அரசுகள் நிதானம் காட்ட வேண்டும் - எய்ம்ஸ்.

 நோய் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது சில மாநிலங்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளன.


இதனை தொடர்ந்து தமிழகத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது இந்த நிலையில் பள்ளிகள் திறப்பதில் அவசரம் காட்டக்கூடாது என டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி பேராசிரியர் எச்சரித்துள்ளார்.


டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி பேராசிரியரான நவீத் விக் தெரிவித்ததாவது பள்ளிகள் திறப்பதில் மத்திய மாநில அரசுகள் அவசரம் காட்டக் கூடாது என்றும் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தாத நபர்கள் ஆகவே என்ன வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.


மாணவர்களுக்கு இந்தியாவில் இன்னும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டாத நிலையில் மாணவர்களை பள்ளிக்கு செல்ல அனுமதி தருவது ஆபத்தானது என்றும் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459