தேன் – மருத்துவ குணங்கள் - ஆசிரியர் மலர்

Latest

01/08/2021

தேன் – மருத்துவ குணங்கள்

 



தேன் மிகச் சிறந்த உணவுப் பொருளாகும். தேன் மூலம் எல்லாப் பிணிகளையும் நீக்கமுடியும்.


       அதிகாலையில் வெறும் வயிற்றில் தேனை நாவால் தொட்டுச் சாப்பிட்டு வந்தால் எந்த வியாதியும் நமக்கு வராது.


      ஆனால், தேன் சுத்தமான தேனாக இருக்கவேண்டும்.


1. தேனுடன்,, விதை நீக்கிய பேரீச்சம்பழம், இஞ்சி இரண்டையும் ஊறவைத்து  உட்கொள்  நோய் எதிர்ப்பு சக்தி பெருகுவதுடன், மல பந்தம் நீங்கி, ஜீரணப்பாதை சீராகும்.


2. தேனில் உள்ள சர்க்கரைச் சத்து வாயிலும், குடலிலும் வெகு சீக்கிரத்தில் உறிஞ்சப்பட்டு விடுகிறது. இதனால் உழைப்பின் களைப்பு நீங்கும்.


3. குரல் வளம். கண் ஒளி மிகும்.


4. ஒன்று முதல்மூன்று டீஸ்பூன் தேனை 100 மி.லி. ஆறிய வெந்நீருடன் கலந்து தினமும் காலை அல்லது இரவு நேரங்களில் வெறும் வயிற்றில் உணவு அருந்துவதற்கு முன் பருகி வருவதால் வயிற்றுப்புண், இரப்பை அழற்சி ஈரல், பித்தப்பை நோய்கள் குணமாகும்.


5. டிபி, சளி, இருமல் குணம் அடையும்.


6.  தேனும், வெந்நீரும் கலந்து அருந்தினால் பருத்த உடல் மெலியும், ஊளைச் சதை குறையும், உடல் உறுதி அடையும்.


7.. தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல் ஜலதோஷம், தலை வலி குணமாகும்.


8. தேனுடன் வெங்காயச்சாறு கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பிரகாசம் அடையும்.


9. தேனும், முட்டையும், பாலும் கலந்து சாப்பிட்டுவந்தால் ஆஸ்துமா உபாதையிலிருந்து தப்பலாம்.


10. இருமல், சளித் தொல்லை நுரையீரல் தொடர்பான நோய் எது இருந்தாலும் பார்லிக் கஞ்சியை வடிகட்டி அதில் தேன் கலந்து சாப்பிட, இருமல் மட்டுப்படும். சளித் தொல்லை குறையும்.



11. தேனையும் மாதுளம் பழ ரசத்தையும் சம அளவு சேர்த்துத் தினமும் சாப்பிட்டால் இருதய நோய்கள் தீரும். பித்தம் தணியும். புதிய இரத்தம் ஊறும்.


12. உடம்பில் இரத்தக் குறைவு அல்லது சோகை நோய் இருந்தால் தேனும், பாலும் சாப்பிட்டு வந்தால் சோகை நோய் நீங்கும்.


13. தேனுடன் சுண்ணாம்பைக் கலந்து, நன்றாகக் குழைத்து பழுக்காத கட்டிகள் மேல் பூச கட்டிகள் பழுக்கும்.


14. மீன் எண்ணெயோடு தேனைக் கலந்து உண்டு வந்தால், ஆறாத புண்கள் ஆறிவிடும்.


15. கருஞ்சீரகத்தை நீர் விட்டுக்காய்ச்சி அதில் தேன் கலந்து சாப்பிட, கீழ் வாதம் போகும்.


16. வயிற்றுவலி ஏற்பட்டவர்களுக்குத் தொப்புளைச் சுற்றிலும் தேன் தடவினால் வலி நீங்கும்.


17. தேனோடு பாலோ, எலுமிச்சம் பழச்சாறோ கலந்து சாப்பிட பித்த நீர்த் தொந்தரவுகள் குறையும். கல்லீரல் வலுவடையும்.


18. அரை கரண்டி தேனுடன், அரை கரண்டி  இஞ்சிச்சாறு கலந்து காலை நேரங்களில் தொடர்ந்து சாப்பிட்டு வர, நல்ல ஜீரண சக்தியும், இரத்த சுத்தியும், இரத்த விருத்தியும் ஏற்படும். நரம்புத் தளர்ச்சிகளும் நீங்கும்.


19. அல்சர் நோய்க்கு சாப்பாட்டிற்கு முன் இரண்டு கரண்டித் தேனைத் தொடர்ந்து சாப்பிட்டு வர, குணமாகும்.


20. முருங்கைக்காய்ச் சாறுடன் சம அளவு தேன் கலந்து பருகினால் நீர்க்கோவை நீங்கும்.


21. தேனில் பூண்டை ஊற வைத்து சாப்பிட்டு வர வாயுக்கோளாறுகள், அஜீரணம், உடல் பருமன், கொழுப்பு நீங்கும்.


22. தேனில் ரோஜாப்பூவை ஊற வைத்து சாப்பிட்டு வர உடல் உஷ்ணம், மலச்சிக்கல் நீங்கி இரத்த விருத்தி உண்டாகும்.


23. தேனில் கற்றாழையை ஊற வைத்து சாப்பிட்டு வர உடல் உஷ்ணம், குடல் புண், மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.


24. தேனில் கடுக்காயை ஊற வைத்து சாப்பாட்டு வர பித்தம் தணியும், மலச்சிக்கல் தீரும், மன அழுத்தம் நீங்கி நல்ல உறக்கம் தரும். நோய் எதிர்ப்பு சக்தி தரும்.


🌿 @TamilMedicine


25. தேனில் வில்வ பழத்தை ஊற வைத்து சாப்பிட்டு வர வாய்ப்புண், வயிற்றுப் புண், குடல் புண், நீங்கி பித்தம் தணியும். உடல் சுறுசுறுப்பும், பலமும் அடையும்.


26. தேனில் நெல்லிக்காயை ஊற வைத்து சாப்பிட்டு வைட்டமின் C , இரும்பு சத்து, கால்சியம் மற்றும் மினரல்களை பெறலாம்.


உஷ்ணம் தணியும், குடல் புண்கள் ஆறும்.

மலச்சிக்கல் நீங்க, இரத்த விருத்தி உண்டாகும். எலும்புகள் பலம் பெறும், கண் பார்வை தெளிவு பெறும்.


நெல்லிக்காய்களைத் துண்டு துண்டாக்கி தேன், ஏலக்காய், ரோஜா இதழ்கள் சேர்த்து இரண்டு நாட்கள் வெயிலில் காய வைக்க வேண்டும். பின்பு ஒரு ஸ்பூன் வீதம் காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகிவிடும்.


என்றும் இளமையுடன் இருக்க வேண்டுமென விரும்புவோர் தினமும் தேனை அருந்த வேண்டும். நாற்பது வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகத் தினமும் தேனை அருந்தி வர வேண்டும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459