திறந்தவெளி பல்கலையில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் பதவி உயர்வு கோர முடியாது - ஐகோர்ட் அதிரடி உத்தரவு. - ஆசிரியர் மலர்

Latest

28/07/2021

திறந்தவெளி பல்கலையில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் பதவி உயர்வு கோர முடியாது - ஐகோர்ட் அதிரடி உத்தரவு.

 


.com/

திறந்தவெளிப்பல்கலைக் கழக முதுகலைப் பட்டம் அடிப்படையில் , இரண்டாம் நிலை சார் பதி வாளராக பணி நியமனம் பெற்றவர் முதல் நிலைசார் பதிவாளராக பணி உயர்வு கோரிய மனுவை தமிழக அரசு நிராகரித்தது. 


இதை எதிர்த்து , அவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி , பணி உயர்வு வழங்குமாறு உத்தரவிட்டிருந்தது. தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா , ஆர் . நீலகண்டன் ஆகியோர் அடங்கிய அமர்வில் , விசாரணைக்கு வந்தது.


 தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல் ஆர்.நீல கண்டன் இளங்கலை பட்டம் பெறாமல் நேரடியாக திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு பதவி உயர்வு வழங்கக் கூடாது என்று அண்ணாமலை பல்கலைக்கழக வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவுப்படுத்தியுள்ளது.


 எனவே , நேரடியாக திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் பணி நியமனமோ , பதவி உயர்வோ கோர முடியாது என்று வாதிட்டார். அரசுத் தரப்பின் இந்த வாதத்தை ஏற்ற நீதிபதிகள் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டதுடன் , இளங்கலை பட்டம் பெறாமல் நேரடியாக திறந்தவெளிப்பல்கலைக் கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற்றவர்கள் பணி உயர்வு கோர முடியாது என்று தீர்ப்பளித்தனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459