ஜாக்டோஜியோ போராட்ட நடவடிக்கை ரத்து.- பள்ளி கல்வி ஆணையரின் செயமுறைகள் - ஆசிரியர் மலர்

Latest

01/07/2021

ஜாக்டோஜியோ போராட்ட நடவடிக்கை ரத்து.- பள்ளி கல்வி ஆணையரின் செயமுறைகள்

 


ஜாக்டோஜியோ போராட்ட நடவடிக்கை ரத்து.- பள்ளி கல்வி ஆணையரின் செயமுறைகள்

22.01.2019 முதல் 30.01.2019 வரை நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் பீங்கேற்ற அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் கைவிடப்பட்டும் , தண்டனை வழங்கி இருப்பின் அவற்றை இரத்து செய்தும் அரசாணை ( நிலை ) எண் 9 , பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் ( கே ) துறை நாள் 02.02.2021 வெளியிடப்பட்டது . மேற்கண்ட | அரசாணை தகவலுக்காகவும் தக்க நடவடிக்கைக்காகவும் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பார்வை ( 2 ) ன்படி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சார்ந்த அரசாணையின் அடிப்படையில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியல்லாத பணியாளர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் கைவிடப்பட்டும் , ஒழுங்கு நடவடிக்கையில் தண்டனை வழங்கி இருப்பின் அவற்றை இரத்து செய்தும் ஆணை வழங்கிய விவரங்கள் கோரப்பட்ட போது ஒருசில மாவட்டங்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருப்பது தெரிய வருகிறது . அதன் காரணமாக அரசாணையினை செயலாக்கம் செய்யும் பொருட்டு கீழ்க்காணும் அறிவுரைகள் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்படுகிறது.



IMG-20210701-WA0017
IMG-20210701-WA0016

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459