மாற்றுத்திறனாளி +2 தனித்தேர்வர்கள் தேர்வின்றி தேர்ச்சி: தமிழக அரசு - ஆசிரியர் மலர்

Latest

31/07/2021

மாற்றுத்திறனாளி +2 தனித்தேர்வர்கள் தேர்வின்றி தேர்ச்சி: தமிழக அரசு

  

பிளஸ் 2 தேர்வெழுத தனித் தேர்வர்களாக விண்ணப்பித்திருந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மதிப்பெண் நடைமுறை குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிளஸ் 2 தேர்வெழுத தனித்தேர்வர்களாக விண்ணப்பித்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு, தேர்வெழுதுவதிலிருந்து விலக்கு அளித்துள்ள தமிழக அரசு, மாற்றித்திறனாளி தனித்தேர்வர்கள் அனைவரும் +2 தேர்ச்சி பெற்றதாகவும் அறிவித்துள்ளது.


மேலும், மதிப்பெண்களின் அடிப்படையில் சுய விருப்பத்தின் பேரில் மாற்றுத்திறனாளிகள் தேர்வெழுதலாம் என்றும், தேர்வின் முடிவே இறுதியானது என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459