Flash News : ஜுன் 14 முதல் தலைமையாசிரியர்கள் பள்ளிக்கு வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. - ஆசிரியர் மலர்

Latest

09/06/2021

Flash News : ஜுன் 14 முதல் தலைமையாசிரியர்கள் பள்ளிக்கு வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

ஜுன் 14 முதல் தலைமையாசிரியர்கள் , அலுவலக பணியாளர்கள் பள்ளிக்கு வர பள்ளிக்கல்வித்துறை ஆணையர் ஆணை. பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது,  மாணவர் சேர்க்கை நடத்த பள்ளிக்கு வர வேண்டும் ஆணையர் உத்தரவு.





நாடு முழுவதும் கொரானா தொற்றுக் காரணமாக இந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படாது என  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்து. இந்த நிலையில் மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது உயர்கல்வி பயில சான்றிதழ் வழங்குவது சார்ந்த பணிகள் நடைபெற உள்ளதால் தொடக்கக் கல்வி முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை உள்ள தலைமை ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பள்ளிக்கு 14.06.2021 முதல் வருகை புரிய வேண்டும் என பள்ளிக்கல்வி ஆணையர் அவர்கள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459