தளர்வுகளற்ற முழு ஊரடங்கின் போது காலை 8மணி முதல் நண்பகல் 12மணி வரை ரேஷன் கடைகள் திறந்திருக்கும் -தமிழக அரசு - ஆசிரியர் மலர்

Latest

25/05/2021

தளர்வுகளற்ற முழு ஊரடங்கின் போது காலை 8மணி முதல் நண்பகல் 12மணி வரை ரேஷன் கடைகள் திறந்திருக்கும் -தமிழக அரசு

 தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கின் போதும் தினமும் காலை 8 மணி முதல் நன்பகல் 12 மணி வரை ரேஷன் கடைகள் திறந்திருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வரும் 31 ஆம் தேதி காலை 6 மணி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின் போது மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கு தளர்வுகள் வழங்கப்படுவது போல் ரேஷன் கடைகளும் இயங்க அனுமதி அளிக்குமாறு பல தரப்பினரிடம் இருந்து கோரிக்கை எழுந்தது.


இந்நிலையில், முழு ஊரடங்கின் போது காலை 8 மணி முதல் நன்பகல் 12 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459