தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 34,285 பேருக்கு கொரோனா தொற்று : மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விபரம் 25.05.2021 - ஆசிரியர் மலர்

Latest

25/05/2021

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 34,285 பேருக்கு கொரோனா தொற்று : மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விபரம் 25.05.2021

 


சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 34,285 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 468 பேர் உயிரிழந்துள்ளனர்.கொரோனாவில் இருந்து 14. 93 கோடி பேர் மீண்டனர் - 1. 51 கோடி பேர் சிகிச்சை தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து 4-வது நாளாக குறைந்துள்ளது. உயிரிழப்பு சற்று அதிகரித்துள்ளது.ஊரடங்கு பலன்கொரோனாவை தடுக்க தமிழகத்தில் ஒரு வாரத்துக்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளை தவிர அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மருந்து, பால் கடைகள் தவிர மளிகை, காய்கறி கடைகள் என அனைத்து கடைகளும் அடைக்கப்பட உள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 34,285 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.குணமடைந்தோர் எத்தனை பேர்?இதனால் மொத்த பாதிப்பு 19,11,496 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 468 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு 88 பேர் இறந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 21,340 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 28,745 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 15,83,504 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்சென்னையில் குறைவு3,06,652 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,62,284 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 2,60,76,131பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 4041 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. ஆனால் உயிரிழப்பு அச்சுறுத்தி வருகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரிதது வருகிறது.கோவையில் உச்சம்கோவையில் மட்டும் 3632 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 1870 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 898 பேருக்கும், மதுரையில் 1358 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 1133 பேருக்கும், திருவள்ளூரில் 1425 பேருக்கும், திருச்சியில் 1110 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 1854 பேருக்கும், விருதுநகரில் 1015 பேருக்கும், ஈரோட்டில் 1555 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது., 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459