அரசுப்பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டுக்கு மாணவர் சேர்க்கை பணியை தொடங்க அறிவுறுத்தல்- பள்ளிக்கல்விதுறை அதிகாரிகள் தகவல் - ஆசிரியர் மலர்

Latest

12/04/2021

அரசுப்பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டுக்கு மாணவர் சேர்க்கை பணியை தொடங்க அறிவுறுத்தல்- பள்ளிக்கல்விதுறை அதிகாரிகள் தகவல்

 

school%252Breopen%25281%2529

அரசுப் பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடர்பான பணிகளை தொடங்க பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது. 


தமிழகத்தில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் பிளஸ் 2 தவிர்த்து இதர வகுப்புகளுக்கு வீட்டுப் பள்ளி திட்டத்தின் கீழ்கல்வித்தொலைக்காட்சி மற்றும் இணையவழியில் பாடங்கள் நடத்தப்படுகின்றன. இதற்கிடையில் நடப்பு கல்வி ஆண்டு இம்மாத இறுதியில் முடி வடைகிறது. இதையடுத்து , அடுத்த கல்வி ஆண்டுக்கான ( 2021-22 ) மாணவர் சேர்க்கை பணிகளில் தனியார் பள்ளிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. ஆனால் , தமிழக அரசின் அனுமதி இல்லாததால் அரசுப்பள்ளிகளில் சேர்க்கை பணிகள் தொடங்கப்படாமல் இருந்தன. இந்நிலையில் , தற்போது அரசுப் பள்ளிகளும் மாணவர் சேர்க்கைக்கான ஆயத்தப் பணியை தொடங்க கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.


 இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது :


 கரோனா பரவலால் பள்ளிகளை முழுமையாக திறக்க முடியாத சூழல் நிலவுகிறது. எனினும் , சுழற்சி முறையில் ஆசிரியர்கள் தினமும் பணிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது . புதிய மாணவர் சேர்க்கைக்கான ஆயத்தப் பணிகளை தொடங்குதல் உள்ளிட்ட இதர கல்விசார் வேலைகளை மேற்கொள்ள வேண்டும். மாணவர் சேர்க்கை விவரம் கோரி பெற்றோர்கள் பள்ளிக்கு வந்தால் , அவர்களை முறையாக வரவேற்று , உரிய முன்விவரங்களை வாங்கிவைத்து , பதிவு செய்துகொள்ள வேண்டும். அதேபோல , அரசுப்பள்ளிகளில் உள்ள நலத்திட்டங்கள் குறித்து அருகிலும் , சுற்றியுள்ள பகுதிகளி லும் தகவல்களை தெரிவித்து மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை வேண்டும். 


அரசின் அனுமதி கிடைத்தவுடன் மாணவர் சேர்க்கை பணிகளை எமிஸ் தளம் வழியாக அதிகாரப்பூர்வமாக பதிவு செய்துகொள்ளலாம். இந்த பணிகளின்போது கரோனா பாதுகாப்பு வழிமுறைகள் முறை யாக பின்பற்றப்பட வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மூலம் பள்ளிதலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் கள் வழங்கப்பட்டுள்ளன . இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459