உடல்நலக்குறைவான ஆசிரியர்களை தேர்தல் பணிக்கு அழைத்து மிரட்டும் அதிகாரிகள்! - ஆசிரியர் மலர்

Latest

22/03/2021

உடல்நலக்குறைவான ஆசிரியர்களை தேர்தல் பணிக்கு அழைத்து மிரட்டும் அதிகாரிகள்!

 .


நோய்தாக்கமுற்ற ஆசிரியர்களை கல்வித்துறையினர் கட்டாயப்படுத்துவதாக புகார் தெரிவித்து ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப் , 6 ம் தேதி நடக்கிறது , தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தும் அலுவலர் பணிகளுக்கு ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என வலியுறுத்தியது . அதன் படி ஆசிரியர்கள் வட்டார கல்வி அலுவலகங்களிலும் , அரசு ஊழியர்கள் அவர்கள் பணியும் உயர் அதிகாரிகளிடமும் விண்ணப்பித்துள்ளனர். உடல் நலக்குறைவு மற்றும் பல்வேறு காரணங்களுக்காக தேர்தல் பணியில் பங்கேற்க முடியாத ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் அதற்கான ஆவணங்களை காட்டினால் அவர்களுக்கு - தேர்தல் பணியில் விலக்கு | அளிக்குமாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் கண்டிப்பாக விண்ணப்பிக்க வேண்டும் என கூறியதன் பேரில் அனைத்து ஆசிரியர்களும் விண்ணப்பித்திருந்தனர். தற்போது விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு கல்வித் துறை மூலம் அரசாணை வழங்கப்பட்டுவருகிறது.

IMG-20210322-WA0008

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459